• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி, ஶ்ரீ ஜயவர்தனபுர, சப்பிரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- தேசிய பல்கலைக்கழக முறைமையின் வசதிகளை விருத்தி செய்வதற்கு களனி பல்கலைக்கழகத்தில் நான்கு மாடி விடுதி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஆறு மாடி பல்பணி கட்டடத்தின் மூன்று மாடிகளை நிருமாணிப்பதற்கும் இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்திற்காக பீட கட்டடத்தொகுதியினை நிருமாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நிருமாணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.