2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆழ்கடலில் மணல் அகழ்வதற்காக DREDGER இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல் - நிருமாணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஆற்று மணல் பற்றாக்குறையின் காரணமாக அதற்கு மாற்று மூலப்பொருளாக தயாரிக்கப்பட்ட கடல் மணலுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. இதற்கு மாற்று தீர்வாக இலங்கை காணி நிலமீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனமானது நிருமாணிப்புக்காக பயன்படுத்தக்கூடிய விதத்தில் கடல் மணலைத் தயாரித்து வழங்கி வருகின்றது. இதன் மூலம் தற்போது நிருமாணிப்பு கைத்தொழிலின் மொத்த மணல் தேவையின் 10 சதவீதம் வழங்கப்படுகின்றது. நிருமாணிப்புக் கைத்தொழிலின் வளர்ச்சியுடன் எதிர்காலத்தில் மணலுக்காக நிலவும் ஆகக்கூடிய கேள்வியினை ஈடுசெய்வதற்கு ஆழ்கடலில் மணல் அகழ்வதற்காக DREDGER இயந்திரமொன்றை கொள்வனவு செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |