• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை - பெலியத்த புகையிரத பாதையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள வீடுகளுக்காக ஒருங்கிணைவாக வீதிகளை நிருமாணித்தல்
- பெலியத்த புகையிரத பாதை கருத்திட்டத்தின் நிருமாணிப்பு பணிகள் பூர்த்தி அடையவுள்ளதோடு, 2019 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பிலிருந்து பெலியத்தவரை முழு கரையோர புகையிரதப் பாதையையும் தழுவி புகையிரத செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப் படுகின்றது. மாத்தறை - பெலியத்த புகையிரத பாதையின் ஒருபக்கத்தில் இந்த பிரதேச மக்கள் வசிக்கும் வீடுகள் அமைந்துள்ளமையினால் அவற்றுக்கு செல்வதற்கான வசதியினை வழங்கும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, புகையிரத பாதைக்கு ஒருங்கிணைவாக வீதிகளை நிருமாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 12.95 கிலோ மீற்றர்கள் மொத்த நீளம் கொண்ட 54 வீதிகளை நிருமாணிக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.