• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மாகாணத்தில் நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கடற்றொழில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி வசதிகள் சார்பில் அலகுகளை நிறுவுத
- கடற்றொழில் துறைமுகங்கள், நங்கூரமிடும் இடங்கள் மற்றும் இறங்குதுறைகளை நிருமாணித்தல் மற்றும் அபி்விருத்தி செய்தல், நீர்வாழ் உயிரின வளர்ப்பினை அபிவிருத்தி செய்தல் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட வட மாகாண நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டமானது 2018 - 2024 காலப்பகுதிக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஏற்பாடு செய்வதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள 174 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கடற்றொழில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி வசதிகள் போன்ற பிரிவுகளை நடைமுறைப் படுத்துவதற்காக கருத்திட்ட அமுலாக்கல் பிரிவொன்றைத் தாபிக்கும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.