2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டம் - உயர்தரம் சார்பில் தொழினுட்ப பாடத்திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டதன் பின்னர் தொழினுட்ப பாடத்திற்கான புதிய பட்டப்பாடநெறிகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 10 அரசாங்க பல்கலைக்கழகங்களை இனங்கண்டுள்ளது இதற்கிணங்க, களனிய, ரஜரட்ட மற்றும் சப்பிரகமுவ உட்பட பல்கலைக்கழகங்களில் மூன்று தொழினுட்ப பீடங்களைத் தாபிப்பதற்கும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றைத் தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான பௌதிக மற்றும் மனிதவளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அதிகரிப்பதற்குமாக 2018-2023 காலப்பகுதிக்குள் 26,400 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |