2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குடாவிலச்சிய குளத்தையும் தெமட்டகல குளத்தையும் புனரமைத்தல் - மஹாவிலச்சிய பிரதேசத்தின் வில்பத்து தேசிய வனப்பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள மஹாவிலச்சிய குளத்தில் சேரும் நீர் இந்த பிரதேச மக்களின் குடிநீர் மற்றும் கமத்தொழில் நோக்கங்களுக்கு நீர்வழங்கும் ஒரே நீர்த்தேக்கமாகும். இங்கு ஒன்றுசேரும் நீர் மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லாததன் காரணமாக வில்பத்து தேசிய வனப்பூங்காவில் அமைந்துள்ள தற்போது கைவிடப்பட்டுள்ள பாரிய குளமொன்றான குடாவிலச்சிய குளத்தை புனரமைப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பலாகல பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய குளங்கள் அடிக்கடி நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவதோடு, அதற்கு மாற்று வழியொன்றாக தற்போது கைவிடப்பட்டுள்ள தெமட்டகல குளத்தையும் புனரமைத்து ஹவன்எல்ல ஓயா ஓடாக போஷிப்பு கால்வாய் ஒன்றையும் அணையொன்றையும் நிருமாணித்து கிராமிய குளங்களுக்கு மேலதிக நீரை வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடியுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குடாவிலச்சிய குளத்தையும் தெமட்டகல குளத்தையும் புனரமைக்கும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |