2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களனி வௌ்ளப்பெருக்கு தடுப்பு சுவரின் பொறியியல் திட்டங்களுக்குத் தேவையான புவியியல் ஆய்வுகளை மேற்கொள்தல் - களனி கங்கை ஆற்றுப்படுகை சார்ந்து வௌ்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பினை குறைப்பதற்கு ஹங்வெல்லையிலிருந்து ஆற்றுப்படுகை வரை வௌ்ளப்பெருக்கு தடுப்பு சுவரொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த பணிகளை மூன்று துணைக் கருத்திட்டங்களின் கீழ் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது உத்தேச பாதுகாப்பு சுவரினை நிருமாணிப்பதற்கு முன்னர் புவியியல் ஆய்வுகள் மேள்கொள்ளப்படவேண்டுமென்பதோடு, இந்த பணிகளை தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக செய்து கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |