2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கமத்தொழில் நவீனமயப்படுத்தல் தொடர்பான கண்காட்சி, மாநாடு மற்றும் விருதுகள் வழங்கல் - இலங்கை கமத்தொழில் துறையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையொன்றாக கமத்தொழில் நவீனமயப்படுத்தல் தொடர்பான கண்காட்சி, கமத்தொழில் புத்தாக்கம் தொடர்பான மாநாடு மற்றும் கமத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு விருதுகள் வழங்கல் நிகழ்ச்சித் திட்டமொன்று 2018 திசெம்பர் மாதம் 11 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதிவரை கொழும்பு சருவதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை கமத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் நடாத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |