2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய மட்ட பகுப்பாய்வு ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல் - இரசாயன மற்றும் சேதன பசளை மற்றும் களைக்கொல்லி போன்றவற்றின் பயன்பாட்டு நிலைமை மற்றும் மேலதிக பாவனையை ஒழுங்குறுத்துவதற்கும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் பிரதிகூலமாக எஞ்சி நிற்கும் மட்டங்களை ஒழுங்குறுத்துவதற்கும் உயர் தரம் வாய்ந்த ஆய்வூடமொன்றை தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அத்தகைய உயர் தரத்திலான ஆய்வுகூடமொன்றைத் தாபிப்பதன் மூலம் இந்த துறைக்குரிய சகல தரப்பினர்களுக்கும் குறைந்த செலவின் கீழ் உயர் பகுப்பாய்வு சேவையொன்றை பெற்றுக் கொள்தவதற்கான வசதிகள் செய்யப்படுகின்றன. இதற்கமைவாக, 286 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் தேசிய மட்ட பகுப்பாய்வு ஆய்வுகூடமொன்றை தாபிப்பதற்கு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |