• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு பாதுகாப்பினை மேம்படுத்துதல்
- மாகந்துரவில் தாபிக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண்மை நிபுணத்துவ நிலையத்தின் மூலம் இயற்கை வேளாண்மை மற்றும் சேதன பசளை தொடர்பிலான ஆராய்ச்சிகள் உட்பட தொழினுட்ப பரிமாற்றல்கள் மேற்கொள்ளப்படுவதோடு, மாகந்துர வலய கமத்தொழில் ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலைத்தின் ஊடாக பயிர் மேம்பாடு, மண் மற்றும் பயிர் போஷிப்பு போன்ற பல்வேறுபட்ட துறைகளுக்குரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதன் மூலம் நிலைபேறுடைய கமத்தொழில் அபிவிருத்திக்கான நிலையமொன்றைத் தாபிப்பதற்கு இயலுமாகுமென கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சுற்றாடல் நற்புறவுமிக்க கமத்தொழில் தொடர்புபட்ட பயிற்சி மற்றும் கருத்திட்ட செயற்பாடுகள், நாடு முழுவதும் உற்பத்திகளை ஊக்குவித்தல், கையாளுதல், இயற்கை வேளாண்மை மற்றும் சேதன பசளை தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்தல் அதேபோன்று உள்நாட்டில் இயற்கை வேளாண்மையை உறுதிப்படுத்தும் முதன்மை நிறுவனமொன்றாகவும் மண், நுண்உயிரியல் தொடர்புபட்ட தேசிய ஆய்வு பிரிவாகவும் இவ்வாறு ஒன்றிணைக்கப்படும் புதிய நிறுவனத்திற்கு பொறுப்பினை வகிக்கமுடியும். இதற்கமைவாக, இந்த இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைத்து நிலைபேறுடைய கமத்தொழில் அபிவிருத்திக்கான நிலையத்தை தாபிப்பதற்கும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.