• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொல்தூவ துணை வீதியினை "சுகுருபாய" விலிருந்து "கனத்த" வீதி வரை நீடித்தல்
- அரசாங்க நிருவாக அலுவலகங்களை ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நிருவாக நகரத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இதற்கு ஒருங்கிணைவாக இந்த பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன. இதன்கீழ் தெமட்டகொடையிலிருந்து சுற்றுவட்ட வீதியை இணைக்கும் வீதியொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டதோடு, தற்போது இதன் ஒரு பகுதியான பொல்தூவ சந்தியிலிருந்து கொஸ்வத்த வரை நிருமாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் முதலாம் கட்டமாக பொல்தூவ சந்தியிலிருந்து "சுகுருபாய" வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, II ஆம் கட்டமாக "சுகுருபாய" விலிருந்து "கனத்த" வீதி வரை நிருமாணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன் தொடர் நிருமாணிப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான 328.63 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.