• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுர மாவட்ட செயலகத்திற்காக புதிய கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- சிறந்த தரம்மிக்க மக்கள் சேவையினை வழங்குவதற்காக தற்போது அநுராதபுர மாவட்ட செயலகம் நடாத்திச் செல்லப்படும் கட்டடத்தில் இடவசதிகளின் வரையறையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தற்போது அநுராதபுரம் மாவட்ட செயலகம் உட்பட மேலும் சுமார் 30 அரசாங்க நிறுவனங்களின் அலுவலகங்கள் நடாத்திச் செல்லப்படும் கட்டடத்திற்குப் பதிலாக சுமார் 150,000 சதுர அடிகள் கொண்ட ஏழு மாடி அலுவலக கட்டடத் தொகுதியொன்றை 1,731.3 மில்லியன் ரூபா முதலீட்டில் நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.