• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒலுவில் துறைமுகத்திலிருந்து மணல் மேடுகளை அகற்றுத
- ஒலுவில் துறைமுக முகத்துவாரத்தில் மணல் நிரம்பியுள்ளமையினால் கடற்றொழில் படகுகளை இந்த துறைமுகத்திற்குள் கொண்டு செல்வதற்கு இடையூறாகவுள்ளதன் காரணமாக இந்த பிரதேச கடற்றொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாவுள்ளது. இதற்கமைவாக, கடற்றொழில் படகுகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் நிரம்பியுள்ள மணலை Dredgers இயந்திரத்தைப் பயன்படுத்தி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சரவை அறிந்துகொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.