2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis பயன்படுத்தி 'வீட்டில் இருந்தே சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் முறையொன்றை அறிமுகப்படுத்தும் கருத்திட்டம் - சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis பயன்படுத்தி 'வீட்டில் இருந்தே சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் முறையொன்றை அறிமுகப்படுத்தும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பிரேரிப்பொன்று இதற்கு முன்னர் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த பிரேரிப்பை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்தப் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மொஹமட் காசிம் மொஹமட் பைசல் அவர்கள் அமைச்சரவை அறிந்துகொள்ளும் பொருட்டு சமர்ப்பித்தார். |