2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு வர்த்தக விமானங்களின் தொழிற்பாட்டிற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் - சுற்றுலா துறையின் மேம்பாடு கருதி, உள்நாட்டு வர்த்தக விமானங்களின் தொழிற்பாட்டிற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவைப்பாடு இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அட்டவணைப்படுத்தப்பட்ட உள்நாட்டு வர்த்தக பயணிகளின் தொழிற்பாடுகளுக்காக பலாலி விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கும் இந்நோக்கம் கருதி 1,965 மில்லியன் ரூபா கொண்ட முதலீ்ட்டைக் கொண்டு கூறப்பட்ட விமான நிலையத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை இலங்கை விமானப்படையினால் துரிதமாக மேற்கொள்வ தற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினாலும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |