2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பௌத்த தர்மத்தை எழுச்சி பெறச்செய்வதற்காக சருவதேச பௌத்த அமைப்பொன்றை தாபித்தல் - உள்நாட்டு ரீதியிலும் சருவதேச ரீதியிலும் பௌத்த தர்மத்தை எழுச்சி பெறச்செய்வதற்கு சருவதேச பௌத்த அமைப்பொன்றை தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பௌத்த தர்ம கோட்பாட்டை எழுச்சி பெறச்செய்வதற்கான நிலையமொன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் உலகெங்கிலும் உள்ள பௌத்த நினைவுச் சின்னங்களையும் இடங்களையும் பாதுகாத்து பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால், உத்தேசிக்கப்பட்ட சருவதேச பௌத்த அமைப்பை தாபிப்பதற்கு அவசியமான சட்டத்தை வரையும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |