2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய நீர்ப்பாசன கமத்தொழில் கருத்திட்டத்திற்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்த - காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய நீர்ப்பாசன கமத்தொழில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இக் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 125 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியுதவியை வழங்குவதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி நிறுவனம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட நோக்கம் கருதி கடன் இணக்கப்பேச்சை மேற்கொள்வதற்கும் உரிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |