2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுநீரக நோயாளர்களின் சிகிச்கை, தடுப்பு மற்றும் நலனோம்பல் கருதி தேசிய சிறுநீரக நிதியத்தை மேம்படுத்துதல் - கண்டறியப்படாத நோய்க் காரணிகளைக் கொண்ட நாட்பட்ட நோயினால் இன்னலுறும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் நோயாளர்களுக்கு மிக பொருத்தமான சிகிச்கை, தடுப்பு மற்றும் நலனோம்பல் சேவைகளை வழங்கும் பொருட்டு "தேசிய சிறுநீரக நிதியம்" தாபிக்கப்பட்டது. கூறப்பட்ட நிதியத்தை பயன்படுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், சிறுநீக நோயாளர்களை முன்கூட்டியே இனங்காண்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள், நோயாளர்களின் சிகிச்கைக்கு தேவைப்படும் சுகாதார துறையிலான உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கிணங்க, அதன் தொழிற்பாடுகளை பயனுறுதி வாய்ந்த விதத்தில் மேற்கொள்வதற்கும் அதன் நன்மைகளை வழங்குவதற்கான திட்டமொன்றை உருவாக்குவதற்கும் சனாதிபதியின் செயலாளர் தலைமை தாங்கும் மேற்பார்வை சபையொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |