• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்திய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குதல்
- வட கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் கருத்திட்டத்தின் கீழ் 65,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டமாக 28,000 வீட்டு அலகுகளை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வீடுட்டு அலகொன்றை 1,280,000/- ரூபா செலவின் கீழ் ND Enterpises (India), Yapka Developers (Pvt.) Ltd., (Sri Lanka) மற்றும் Archedium (Pvt.) Ltd., (Sri Lanka) ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.