2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெல்தெனிய, பூகொட மற்றும் வெலிமட நீதிமன்ற கட்டட தொகுதிகளின் நிருமாணிப்பு - நீதிமன்ற பணிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை செய்யும் நோக்கில் தெல்தெனிய, பூகொட மற்றும் வெலிமட நீதிமன்ற கட்டட தொகுதிகள் சார்பில் புதிய ஒருசில கட்டடங்களை நிருமாணித்துக் கொள்ளும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அரசாங்கத்திற்குச் சொந்தமான நிருமாணிப்பு நிறுவனங்களின் ஊடாக இந்த நிருமாணிப்பு வேலைகளை செய்து கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |