2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேசாலை மீன்பிடி துறைமுகத்தை நிருமாணித்தல் - வடமாகாணத்தில் கடற்றொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்தல், நீர்வாழ் உயிரின செய்கையை அபிவிருத்தி செய்தல் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி என்பவற்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் வட மாகாண நிலைபேறுடைய கடற்றொழில் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பேசாலை மீன்பிடி துறைமுகத்தை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 5,267 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த கருத்திட்டம் சார்பில் நிருமாணிப்புக் கம்பனியொன்றை தெரிவுசெய்யும் பொருட்டும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவொன்றையும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் நியமிப்பதற்காக கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |