2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரிப்புக்குள்ளாகியுள்ள களனி கங்கையின் இடதுகரையில் உருக்குத் தகட்டிலான பாதுகாப்பு மதிலொன்றை நிருமாணித்தல் - களனி கங்கை கரையானது கொலன்னாவை, ஹல்முல்லை என்னும் இடத்தில் பாரிய அளவில் அரிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, இதன் காரணமாக சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழியாக கங்கையின் கரை நெடுகே உருக்குத் தகட்டிலான மதிலொன்றை நிருமாணிப்பது பொருத்தமானதென பிரேரிக்கப்டப்டுள்ளது. இதற்கமைவாக, 604 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் நிருமாணிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |