2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கட்டுபொத்த - பமுனாகொட்டுவ - பண்டுவஸ்நுவர நீர்வழங்கல் கருத்திட்டம் - குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 133,000 பேர்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள கட்டுபொத்த - பமுனாகொட்டுவ - பண்டுவஸ்நுவர நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக M/s.Kolon Global Corporation நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பிரேரிப்பினை மதிப்பீடு செய்வதற்கும் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்குமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவுக்கும் கருத்திட்ட குழுவுக்கும் தொடர்புபடுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |