2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாண பிரதேசத்தில் புதிய தொழில்முயற்சியாளர்களை பலப்படுத்துவதற்காக வியாபார நிலையமொன்றினைத் தாபித்தல் - தகவல் தொழினுட்பத்தினை அடிப்படையாக கொண்ட தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி புதிய தொழில்வாய்ப்புகளையும் வருமான வழிகளையும் பிறப்பித்து வடக்கு பிரதேசத்தில் நிலையான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஏற்றுமதி சந்தையின்பால் விரைவில் செல்லக்கூடிய விதத்தில் தொழில்சார் சேவை வர்த்தகங்களுக்கும் தொழில்முயற்சியாளர்களுக்கும் மிக இலகுவாகவும் செலவு பயனுள்ள விதத்திலும் தமது அலுவலகங்களை தாபிக்கக்கூடிய விதத்தில் தேவையான சேவைகளை வழங்குவதற்கு புதிய தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தும் நிலையமொன்றை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் தாபிக்கும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |