2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் மூத்த பிரசைகளுக்கான தேசிய கொள்கை - இலங்கையின் மொத்த சனத்தொகையின் 12.4 சதவீதம் அல்லது 2.6 மில்லியன் பேர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரசைகளாவதோடு, இது 2022 ஆம் ஆண்டளவில் 16.3 சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கம் மூத்த பிரசைகளின் நலனோம்பல் மற்றும் பாதுகாப்பின் பொருட்டு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலைமையினை மேலும் அதிகரித்து மூத்த பிரசைகளின் வாழ்வாதர அபிவிருத்தி மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கொள்கையை உரிய நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |