• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு பற்றிய மூலோபாயம்
- 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை மக்களுக்கும் ஏனைய தரப்பினர்களுக்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு, டிஜிட்டல் தொழினுட்ப நலன்களை அடையக்கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த சைபர் பாதுகாப்பு சூழல் முறைமை யொன்றை வடிவமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, துறைசார்ந்த நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் தயாரிக்கப்பட்டுள்ள சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.