2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கதிர்காமம் புண்ணிய பூமி அபிவிருத்தி கருத்திட்டம் - உள்நாட்டு வௌிநாட்டு பக்தர்களின் வழிபாட்டு தலமாகிய கதிர்காமம் புண்ணிய பூமிக்கு வருகை தரும் மக்களின் வசதி கருதி இந்த நகரத்தில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள், துப்பரவேற்பாட்டு வசதிகள், வடிகாலமைப்பு வசதிகள், திண்மக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வசதிகளை, தங்குமிட வசதிகள், போன்றவற்றை மேலும் விருத்தி செய்ய வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பொது வசதிகள், பொலிஸ் காவலரண், வாகனத் தரிப்பிடம், பாதுகாப்பு சுவர்கள், ஓய்வுமண்டபங்கள் உட்பட விருத்தி செய்யப்பட்ட வீதிமுறைமை போன்ற அம்சங்களை உள்ளடக்கி கதிர்காமம் புண்ணிய பூமியில் அபிவிருத்தி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |