2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மண்சரிவு அபாயத்துக்குள்ளாகியுள்ள கேகாலை நீதிமன்ற கட்டடதொகுதி அமைந்துள்ள பூமியை நிலைப்படுத்தல் - 80 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டடங்களைக் கொண்ட கேகாலை நீதிமன்ற கட்டட தொகுதி அமைந்துள்ள பூமி மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுத்துள்ளது. இந்த அபாயத்திலிருந்து மீட்பதற்கு இந்த பூமியை நிலைப்படுத்தும் பொருட்டுத் தேவையான நிதியங்களை பெற்றுக்கொள்வதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |