• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிருவாக மாவட்ட மட்டத்தில் சமாதான நீதவான்களை நியமிப்பதற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்துதல்
- சமாதான நீதவான்களை நியமிக்கும் போது இதுவரை நடைமுறையிலிருந்த நீதிமன்ற வலயம், மாவட்டம் மற்றும் பிரிவு என்பவற்றுக்குப் பதிலாக நிருவாக மாவட்டத்திற்கு சமாதான நீதவான்களை நியமிக்கக்கூடியவிதத்தில் உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவை திருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்ததமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.