• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாதிரி கிராமங்கள் நிகழ்ச்சித்திடத்தின் மூலம் ஏற்றுமதி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை சமூகமயப்படுத்தல்
- அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் ஏற்றுமதி கிராமங்கள் நிகழ்ச்சித்திடத்தின் மூலம் மாதிரிக் கிராமங்களில் வசிப்பவர்கள் பொருளாதார மற்றும் சுற்றாடல் அபிவிருத்தியினை அடையமுடியுமென இனங்காணப்பட்டுள்ளது. மாதிரி கிராமங்களில் வசதிக்கும் பயனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதி பெருந்தோட்டப் பயிர்களை கூட்டாக பயிர் செய்வதற்குத் தேவையான நடுகை பொருட்கள், அறிவு உட்பட ஏனைய தொழினுட்ப ஒத்துழைப்பினை வழங்குதல் அல்லது உற்பத்தி கைத்தொழிலொன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் மூலம் பயனாளிகளுக்கு வாழ்வாதார அபிவிருத்தி வசதிகளை வழங்கமுடியும். இதற்கமைவாக, மாதிரி கிராமங்கள் சார்ந்து சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து ஏற்றுமதி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.