• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறையொன்றை தயாரித்தல்
- இலங்கையில் மின்சாரத்திற்கான அணுகுகை 100 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆயினும், சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் வருடாந்தம் மின்சாரத்தை பிறப்பிப்பதற்காக செலவு செய்யப்படும் எரிபொருளை குறைத்து கொள்வதனால் மின்சார உற்பத்திக்கான செலவினைக் குறைத்துக் கொள்ள முடியும். இதற்கிணங்க சிக்கனமான மின்சாரத்தினை பாவிப்பதற்கான நடைமுறை சார்ந்த வழிமுறையொன்றை பிரேரிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினாலும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.