• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு
- இலங்கையும் சீனாவும் இவ்விரு நாடுகளினதும் பெருந்தோட்ட கைத்தொழிலின் நலன் கருதி பரஸ்பர ஒத்துழைப்பு ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கூறப்பட்ட ஒத்துழைப்பு ஆவணத்தின் முதலாவது படிமுறையாக பெருந்தோட்ட துறையில் தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.