2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மட்டக்குளி காக்கைத்தீவு கடற்கரை பூங்காவுக்கு அருகில் உத்தேச பல்பணி கட்டடத்தினை நிருமாணித்தல் - மட்டக்குளி காக்கைத்தீவு பிரதேசத்தில் வசிக்கும் ஆட்களுக்கு அவர்களின் பொது செயற்பாடுகளுக்கான இடவசதியினை வழங்கும் நோக்குடன், உலக வங்கியின் உதவியுடன், அங்கு நிருமாணிக்கப்பட்டுள்ள கடற்கரை பூங்காவுக்கு அருகாமையில் பல்நோக்கு கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், 65 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணியொன்றில் 14,500 சதுர அடி கொண்ட நிலப்பரப்புடன் கூடிய பல்நோக்கு கட்டடத்தினை நிருமாணிக்கும் பொருட்டு பதில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் லசந்த அழகியவண்ண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |