• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோய் மற்றும் புற்று நோய் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பராமரிப்பு சேவையினை வழங்கும் வகையில் அநுராதபுரத்தில் பராமரிப்பு சேவை நிலையமொன்றை நிருமாணித்தல்
- காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் மற்றும் புற்று நோய் காரணமாக மரணமடையும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அநுராதபுரம் நகரத்தில் பராமரிப்பு சேவையினை வழங்கும் நிலையமொன்றை நன்கொடையாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியாவின் சாந்தி மன்றம் உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச நிலையத்தின் கீழ் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான பராமரிப்பு பிரிவு, வௌிவாரி நோயாளிகளுக்கான சிகிச்சை, வீடு சார்ந்த சலுகை சிகிச்சை சேவை பிரிவு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு போன்றவற்றை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச பராமரிப்பு சேவை நிலையத்தை தாபிப்பதற்கும் நடாத்திச் செலுவதற்குமான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று அவுஸ்திரேலியாவின் சாந்தி மன்றத்துக்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த பராமரிப்பு சிகிச்சை நிலையத்தை தாபிப்பதற்கும் நடாத்திச் செல்வதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.