• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூரைகள் மீது பொருத்தும் சூரிய மின்கல தொகுதியின் மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் கருத்திட்டத்திற்கான கடன் திட்டம்
- ஒவ்வொரு வீடுகள் மீதும் வர்த்தக/தொழிற்சாலை கட்டடங்களிலும் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் முறைமைகளை பொருத்துவதன் ஊடாக தேசிய மின் இணைப்பிற்கு 2020 ஆம் ஆண்டளவில் 200 மெகாவொட் மின்சாரத்தையும் 2025 ஆம் ஆண்டளவில் 1,000 மெகாவொட் மின்சாரத்தையும் வழங்கும் குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தப்படும் 'சூரியபலசங்கிராமய நிகழ்ச்சித்திட்டத்திற்கு' உதவுவதற்காக பிரேரிக்கப்பட்ட கடன் திட்டமானது தொழிற்படுத்தப்படும். ஆதலால், வீடுகள் மீதும் வர்த்தக/தொழிற்சாலை கட்டடங்களிலும் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் முறைமைகளை பொருத்துவதற்காக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிதி உதவியினை வழங்குவதற்கு பிரெரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தின் அமுலாக்கத்திற்கு தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் உப கடன் உடன்படிக்கைகளை பங்களிப்புச் செய்யும் நிதி நிறுவனங்களுடன் கைச்சாத்திடும் பொருட்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.