• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செல்லிட தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் போது அழைப்பு இணைப்பு மற்றும் தரவு பரிமாற்ற வினைத்திறனை மேம்படுத்தல்
- கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் செல்லிட தொலைபேசிகளுக்கான குறைவான வானலைக்கம்பி (அன்டனா) தழுவுகை காரணமாக தமது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தரமான சேவையினை வழங்கும் சவாலை தொலைபேசிச் சேவை தொழிற்பாட்டாளர்கள் எதிர்கொள்கின்றனர். அதற்கிணங்க, இப் பிரச்சினைக்கு தீர்வொன்றாக, இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் முக்கியமான அமைவிடங்களில் மேற்கூரை வானலைக்கம்பிகளை (அன்டனா) தாபிப்பதற்கான பொறிமுறையொன்றை வகுத்தமைக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.