2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பு - 2021 - 10 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் அடுத்த சனத்தொகை தொகை மதிப்பினை 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்வதற்கு தொகைமதிப்பு, புள்ளிவிபர திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஆதலால், சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பின் பட்டியலிடும் கட்டத்தை 2020 ஆம் ஆண்டிலும் கணக்கிடல் மற்றும் தரவுகளை பரப்பும் கட்டங்களை 2021 ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |