• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பாலங்களை நிருமாணித்தல்
- கிராமப்புற பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்தும் பொருட்டும் மாகாணங்களுக்கிடையில் பிரதேச அபிவிருத்தியில் காணப்படும் வேறுபாடுகளை குறைக்கும் பொருட்டும் 4,000 கிராமிய பாலங்களை நிருமாணிப்பதற்கான தேவையினை அரசாங்கம் இனங்கண்டுள்ளது. இச்சூழமைவில், வௌிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் கிராமிய பால நிருமாணிப்பு கருத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 1,000 பாலங்கள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, ஆரம்ப கருத்திட்டத்தின் கீழ் மேலும் 250 கிராமிய பாலங்களை நிருமாணிப்பதற்கு அவசியமான மேலதிய நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.