2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காணிகளை துண்டாடும் போது சூழல் முறைமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்தல் - வீடுகளை நிருமாணிப்பதற்கு அல்லது வேறு நோக்கங்களுக்கு காணிகளை துண்டாடும் போதும் வீடமைப்பு கருத்திட்டங்களை ஆரம்பிக்கும் போதும் சூழல் முறைமைக்கு ஏற்படக்கூடிய பிரதிகூலமான பாதிப்புகளை குறைப்பதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களும் அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும் இருந்த போதிலும் அவற்றை உரிய முறையில் செயற்படுத்தாமை காரணமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆதலால், இந்த பிரச்சினைகளை குறைத்து பயனுள்ள வகையில் அரசாங்க மற்றும் தனியார் காணிகளை பயன்படுத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |