2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தொழிற்பாட்டினை பலப்படுத்துதல் - அரச துறையில் அரசிறை பிரிவை பேணி மேம்படுத்துவதில் முக்கியமான வகிபாகமொன்றை இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு கொண்டுள்ளது. ஆதலால், அரசிறை பிரிவை மேலும் மேம்படுத்துவதன் மூலம் அரச பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்குடன் இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களுக்கு நிபுணத்துவ பயிற்சியை வழங்கும் பொருட்டு வகுத்தமைக்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |