2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாதிரி கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளின் மேம்பாட்டிற்காக கிராமியப் பாலங்களை நிருமாணித்தல் - அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உட்கட்டடமைப்பு வசதிகள் குறைந்த கிராமங்களில் ஆரம்பிக்கப்படும் மாதிரி கிராமங்களைச் சேர்ந்த வீட்டு பயனாளிகளுக்கு நகர பொது வசதிகளை இலகுவாக அடையக்கூடிய விதத்தில் கட்டுவன, பட்டகஸ்ஸ கிரம ஓயாவுக்கு குறுக்காக இடப்படும் பாலம், ஹந்துகல கிரம ஆரவுக்கு குறுக்காக இடப்படும் இளைஞர் சேவைகள் பாலம், கட்டுவன ஊருபொக்க ஓயாவுக்கு குறுக்காக இடப்படும் கம்மலே இறங்குதுறை பாலம் கொஹொம்போருவ மற்றும் சியம்பலாமுறயவை இணைக்கும் துந்தொல குறுக்கு பாலம், பெலியத்த கிராம ஓயாவுக்கு குறுக்காக அங்குல்மடுவ - அரங்கல வீதி பாலம் மற்றும் தங்கல்ல கந்துருபொக்குன வீதிக்கூடாக இடப்படும் பிரயாணிகள் மேற்பாலம் ஆகிய ஆறு கருத்திட்டங்களையும் 'நகமு புரவர' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |