2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடும் வறட்சி மிக்க காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் - கடும் வறட்சி மிக்க காலநிலை காரணமாக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமற் போனதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் தேவைப்படும் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது . இதற்கமைவாக, வறட்சி மிக்க காலநிலைமை காரணமாக தொடர்ச்சியாக கடந்த மூன்று போகங்களில் பயிர்செய்வதற்கு முடியாமற்போன நெல் மற்றும் துணைச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாய குடும்பங்கள், வறட்சி மிக்க காலநிலை காரணமாக தமது வாழ்வாதார வழிகள் இல்லாமற்போன நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் மற்றும் கமத்தொழில் தொழிலாளர் குடும்பங்கள் 451,224 சார்பில் நிவாரணம் வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |