• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாண இலகு புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிப்புகளைக் கோரல்
- வசதிகளுடன்கூடிய பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையொன்றைத் உருவாக்கும் நோக்கில் இறாகம - கடவத்தை - கொழும்பு கோட்டை ஊடாக கிருளப்பனை வரை 33 கிலோ மீற்றர் நீளமான 'செந் வீதி', களனிய - பொரளை - நுகேகொடை - பிலியந்தல ஊடாக மொறட்டுவ வரை 28.3 கிலோ மீற்றர் நீளமான 'பசுமை வீதி' மற்றும் ஹூணுபிட்டிய - அங்கொட - கொஸ்வத்தை கொட்டாவ வரை 22.3 கிலோமீற்றர் நீளமான 'நீலவீதி' என்னும் பெயர்களில் மூன்று இலகு புகையிரத போக்குவரத்து வீதிகளை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரிப்புகளை கோரும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.