2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் கொள்கலன்கள் மற்றும் சரக்குகளை துரிதமாக விடுவித்துக் கொள்வதற்கான வசதிகளை செய்தல் - கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் கொள்கலன்கள் மற்றும் சரக்குகளை நவீன தொழினுட்பத்தை பயன்படுத்தி துரிதமாக விடுவித்துக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துடன் அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியொன்றாக சுங்கத் தீர்வை செலுத்தா பொருட்குதமொன்றை நிருமாணித்து கையாள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அபிப்பிராய கோரிக்கைகளுக்கு அக்கறை செலுத்திய தரப்பினர்களிடமிருந்து சாத்தியத் தகவாய்வுடன்கூடிய விலை முன்வைப்பினைச் செய்யும் பொருட்டிலான கோரிக்கையினை முன்வைக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |