• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைவிடத்தின் கொள்ளளவை மேம்படுத்தல்
- வருடமொன்றுக்கு 15 மில்லியன் பயணிகளுக்கான வசதிகளை வழங்குவதற்கு ஏதுவாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைவிடத்தின் கொள்ளளவை மேம்படுத்துவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.. கூறப்பட்ட கருத்திட்டம் நிறைவேறும் வரையில், பயணிகளுக்கு வசதிகளை வழங்குவதற்காக இடைகால முனைவிட கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. ஆதலால், கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு, கூறப்பட்ட இடைகால முனைவிட கட்டடத்தின் நிருமாணத்திற்கான ஒப்பந்தத்தை M/s. China State Construction Engineering Corporation Ltd. நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.