2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் இனக்குழுக்கள் பற்றிய ஆவணமாக்கலை உருவாக்குதல் - இலங்கையில் வசிக்கும் இனக்குழுக்கள் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளை ஒன்றிணைத்து “People of Sri Lanka” நூலொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கிணங்க, தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதன் மூலம், சமாதானம் ஓங்கும் தேசமொன்றை உருவாக்கும் நோக்குடன், இனகுழுக்கள் தொடர்பான கூறப்பட்ட நூலில் வௌிப்படுத்தப்பட்ட தகவல்களை ஒன்றிணைத்து ஆவணமாக்கல் பற்றிய நிகழ்ச்சித்திட்டமொன்றை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிப்பதற்கு அவசியமான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |