2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 'உள்ளூர் அபிவிருத்தி உதவிக் கருத்திட்டத்தை' நடைமுறைப்படுத்தல் - வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகளையும் உள்ளடக்கி, அதன் உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவன ஆற்றல்களையும் வலுப்படுத்தல் உள்ளடங்கலாக உள்ளூராட்சி அதிகாரசபைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் கருதி 'உள்ளூர் அபிவிருத்தி உதவிக் கருத்திட்டத்தின்' கீழ் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியங்களை வழங்குவதற்கு உலக வங்கி இணங்கியிருந்தது. எவ்வாறாயினும், கூறப்பட்ட பிரதேசங்களிலுள்ள 134 உள்ளூராட்சி அதிகாரசபைகளின் மேலதிக அபிவிருத்தி செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், இக்கருத்திட்டத்திற்கான உலக வங்கியின் பங்களிப்பை 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |