2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உயர் கல்வி வசதிகளை வழங்கும் பொருட்டு தேசிய மட்டத்திலான பல்கலைக்கழகமொன்றைத் தாபித்தல் - இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உயர் கல்வி வசதிகளை வழங்கும் பொருட்டு தேசிய மட்டத்திலான பல்கலைக்கழக மொன்றைத் தாபிப்பது தொடர்பில் உரிய துறையிலான நிபுணத்துவக் குழுவொன்றின் சிபாரிசுகளுடன் சேர்த்து கருதுகோள் பத்திரமொன்று வரையப்பட்டுள்ளது. ஆதலால், கூறப்பட்ட கருதுகோள் பத்திரத்தையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பிரேரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை தாபிப்பதற்கான சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |