2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை அம்பாந்தோட்டையில் தாபித்தல் - சீன அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஒன்றிணைந்த கருத்திட்டமொன்றாக 400 மெகாவொட் கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சிங்கப்பூரில் கூட்டிணைக்கப்பட்ட Hambantota Power Private Limited நிறுவனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் தாபிக்கப்படும் கூட்டுத் தொழில்முயற்சி ஒன்றின் மூலம் கூறப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |