2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராஜதந்திர, சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு யுக்ரேன் நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான வீசா விலக்களிப்பு - இவ்விரு நாடுகளுக்குமிடையில் பிரயாணம் செய்யும் போது இராஜதந்திர, சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் இவ்விரு நாடுகளினதும் பிரசைகள் வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்கினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கைக்கும் யுக்ரேனுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |